குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற அசீரணம், ஜலதோஷம், இருமல், இளைப்பு, ஒக்காளம், கணைசூடு, காமாலை, காய்ச்சல், தலைவலி, பிரளி, மாந்தம், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்பிசம், வயிற்றுவலி, வயிற்றோட்டம், மூச்சுத்திணறல், வாந்தி முதலிய வியாதிகளைக் குணமாக்குகிறது.
பாலூட்டும் தாயார்
உளுந்து, எருமைப்பால், கடலை, தேங்காய், புளித்தமோர், மாங்காய், மாமிசம், மொச்சை போன்றவைகளை சாப்பிட்ட நாட்களிலும், குழந்தைகள் மந்தமான உணவுகளை உட்கொண்ட நாட்களிலும், குழந்தைகள் படுக்க போகும் போது 1 அல்லது 2 மாத்திரைகளை வெந்நீர் அல்லது தாய்ப்பாலில் உரைத்து கொடுத்தால் குழந்தைகளின் மாந்தம் நீங்கிவிடும். எந்த வியாதிகளையும் வரவிடாது. தினந்தோறும் இரவில் பாலகுடோரி 1 அல்லது 2 மாத்திரை வீதம் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு பசியையும், இரத்தவிருத்தியையும், உடல் நலத்தினையும், பருமனையும் சுறுசுறுப்பையும் உண்டாக்குகிறது.
உட்பொருள்கள்
- திரிகடுகு
- ஓமம்
- லிங்கம்
உட்கொள்ளும் விதம்
- 1-3 மாதம் - 1/2 மாத்திரை
- 6-1 வருடம் - 1 மாத்திரை
- 1-3 வருடம் - 2 மாத்திரை
- 3-5 வருடம் - 3 மாத்திரை
- 5-7 வருடம் - 4 மாத்திரை
மருந்து உட்கொள்கின்ற குழந்தையும் தாயும் விலக்க வேண்டியவை
பழைய சாதம், மொச்சை, தட்டை, கொள்ளு, உளுந்து, கிழங்கு வகைகள், பூசணி, பாகற்காய், வாழைக்காய், மாங்காய், தேங்காய், மாமிசம், முட்டை, புகையிலை, குளிர்ந்த நீர், தயிர், மோர், தக்காளி.
1 comment
Askar
Dear sir,
I give 1 and half balakudori to my 1 year son for digestion.. and evening his legs are infect by allergy.. still he have allergy.. what can I do? Pls reply