உழைக்கும் மகளிருக்கான உடல் நலக்குறிப்பு

இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லவும் சுயமாக முன்னேறவும் விரும்புகிறார்கள். ஆனால், உடல்நலம், உடற்பயிற்சி என அவர்களுக்கென நேரம் ஒதுக்க முடியாமல் திணறுகிறார்கள். தலைவலி, முதுகுவலி போன்ற சாதாரண உடல் உபாதைகள் தொடங்கி மனநலம் சார்ந்த பிரச்சனைகள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய தீவிர நோய்களால் பணிக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், என்னதான் பரபரப்பான வாழ்க்கை முறை என்றாலும், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டியது மிகவும் அவசியம். அதற்கான சில எளிமையான ஆலோசனைகள்,

 

  • உணவை பல வேளைகளாக பிரித்து சாப்பிடவேண்டும். இதனை "ஸ்ப்ளிட் மீல் பிளான்" என்று கூறுவோம். காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகள், 11 மணியளவில் பழரசங்கள் அல்லது பழங்கள் சாப்பிடுவது, மதியம் கொஞ்சம் சாதம், நிறைய காய்கறிகள், மாலை நேரத்தில் சுண்டல் போன்ற ஸ்னாக்ஸ், இரவு உணவாக வரகு, சாமை உணவுகளை சாப்பிடலாம்.
  • இன்று பெரும்பாலான பெண்கள் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து ஐந்து நிமிடங்களுக்கு நடந்து விட்டு வரலாம். இது உடலை உற்சாகமாக வைத்திருக்கும். 
  • தினமும் அரை மணிநேரம் யோகா அல்லது தியானம் செய்வது நல்லது.
  • ஒரு நாளைக்கு குறைந்தது 3 கிலோமீட்டர் அல்லது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
  • நைட் ஷிபிட் பணிக்கு செல்லும் பெண்களுக்கு, அவர்கள் வேலை நேரம் , மொத்த "பயாலஜிக்கல் நேரத்தை" யும் மற்றும் போது மாதவிடாய் பிரச்சனை ஏற்படலாம். உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகள் மூலம் இதை ஓரளவு சரி செய்யலாம்.
  • உடலில் இருக்கும் சர்க்கரை மற்றும் ரத்தத்தின் அளவை 6 மாதங்களுக்கு ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளவும்.

ரூமி பெமினோ பானம் 

பெண்களுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது தான் ரோஹிணி ஹெர்பல்ஸ் "ரூமி பெமினோ மூலிகை தேநீர்" இதில் நெருஞ்சில், நீர்முள்ளி, செம்பருத்தி, கல்யாண முருங்கை போன்ற மூலிகைகள் அடங்கியுள்ளன. 

இதனை தேநீராக தயாரித்து 2 வேளை அருந்தும் போது பெண்களின் மாதவிடாய் சுழற்சி முறைப்படுத்தப்படுகிறது. குழந்தை பிறக்க தடையாக உள்ள காரணிகளை நீக்குகிறது.

ரூமி அஸ்வா பானம்   

அமுக்கிரா கிழங்கு கலந்த அஸ்வா பானம் உடலுக்கு போஷாக்கையும், ஊட்டத்தையும் அளிக்கிறது. இது தசைகளையும், எலும்புகளையும் வலுப்படுத்துகிறது. இதனை ஒரு பங்குக்கு ஆறு பங்கு நீர் கலந்து எடுத்துவர சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். 

 

 

Leave a comment

All comments are moderated before being published